தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களில் முன்னணி நடிகைகள் பலரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் கொடிகட்டி பறந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா . இருப்பினும் இந்த நிலை சிறிது காலமே நீடித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மையோயசிடிஸ் எனும் மர்ம நோயால் பாதிக்கபட்டு இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சமந்தா தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க நடிகை சமந்தா கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து இருவரும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் சமந்தா இந்த நோயால் பாதிக்கபட்டு இருந்த நிலையில் நாகசைதன்யா அவரை நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும் மேலும் போனில்

தொடர்புகொண்டு பேசியதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம இருந்தத. இதனிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாகசைதன்யா, சமந்தாவை நான் பத்து வருடங்களுக்கு முன்னர் ஏ மாயா செசாவே படத்தில் தான் முதலில் பார்த்தேன். இதையடுத்து அவரை பிடித்துபோக எப்படியாவது இம்பிரஸ் செய்ய எழு வருடங்களாக முயற்சி செய்த நிலையில் இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டேன். இருந்தும் எங்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள்

ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு இருக்கையில் சமந்தா தற்போது உடல்நிலை மோசமான நிலையில் நாகசைதன்யா பிரபல இளம் நடிகையான சோபிதா துலிபாலாவும் இருவரும் இணைந்து ஒன்றாக டேட்டிங் செய்து வருவதோடு தற்போது வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……