தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவருக்கு மக்கள் மற்றுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படி இருக்கையில் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி

இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் எங்கும் திரையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா,  யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் படம் குறித்த தகவல்கள் மும்முரமாக வெளியாகி வரும் நிலையில் தளபதி விஜய்

அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பூ வாரிசு படபிடிப்பில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் அதில், தளபதி விஜய் அன்றைய நாள்

படபிடிப்பில் சுமார் 103 டிகிரி ஜூரம் இருக்கும் இருந்தும் அந்த காட்சியில் அணைத்து நடிகர்களும் வந்துவிட்ட காரணத்தால் அவர் மறுக்காமல் வந்து நடித்து முடித்து விட்டு உடனே மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிவிட்டார் என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை பீதியடைய செய்ததோடு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது……