தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு நம்மை விட்டு மறைந்த நிலையிலும் அவர்களது நடிப்பும் நினைவும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளது எனலாம். அந்த வகையில்  எம்ஜிஆர் , சிவாஜி கணேசன் என பழம்பெரும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்தவர் பிரபல முன்னணி பழம்பெரும் நடிகை சாவித்திரி. மேலும்

சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இந்நிலையில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் முதன் முதலில் கல்யாணம் பண்ணிபார் எனும் படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.  மேலும் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதை தாண்டி

இயக்குனர், தயாரிப்பாளர்  என பல துறைகளிலும் கலக்கி உள்ளார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி நடிகரான ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த 1952-ம் ஆண்டு நடந்து முடிந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கி விட்டார். இதனைதொடர்ந்து இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி எனும் மகளும் சதிஷ்குமார் கணேசன் எனும் மகனும் உள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது வாழ்க்கை பயணத்தை படமாக எடுக்கபட்ட நிலையில் மகாநதி எனும் அந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இப்படி இருக்கையில் அவர் மறைந்து பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அவர்களது மகன் மற்றும் மகளின் சமீபத்திய புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னங்க அப்படி அம்மாவா பாத்த மாதிரியே இருக்காங்க என வர்ணித்து வருகின்றனர்……