தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் எத்தனையோ புதுமுக காமெடி நடிகர்கள் வந்து தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு நடித்து வரும் நிலையிலும் இவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக அந்த காலத்தில் இருந்து நகைச்சுவையில் நாயகனாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். தனது பாடிலேங்குஜ் மற்றும் நகைச்சுவையான முக பாவனைகளால்

அனைவரையும் எளிதில் சிரிக்க வைத்து விடுவார் அந்த அளவிற்கு தனது காமெடி திறமையின் மூலமாக சிறியவர் முதல் பெரியவர் வரை பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இதையடுத்து பல முன்னணி நடிகர்காளின் படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஹீரோவாக நடிக்க எண்ணி பல படங்களில் நடித்த நிலையில் எதிர்பாரதவிதமாக சில சிக்கல்கள் ஏற்பட்டு சில வருடங்கள் படங்களில்

ஏதும் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டார். இதனைதொடர்ந்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுத்த வடிவேலு அவர்கள் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்ததை அடுத்து அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் இப்படி ஒரு

நிலையில் வடிவேலு அவர்கள் வீட்டில் சோகமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது அவரது தாயாரான சரோஜினி பாப்பா அவர்கள் 84 வயதாகும் நிலையில் இன்று காலை உடல்நிலை குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இந்தா நிகழ்வு அவரது குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு உள்ளாகியுள்ள இந்த தகவல்கள் அறிந்த பல முன்னணி திரை பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்……….