சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் பலத்த  பிரபலமாக இருப்பதோடு அதில் கலந்து கொள்ளும் வெகுவாக தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் அடையாளபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் முன்னணி பிரபலங்களாக கலக்கி வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வளவாக மக்களிடையே பரிட்சயமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தனி

பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்றைக்கு காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அமீர் மற்றும் பவனி. இதையடுத்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே காதலித்து வந்த நிலையில் வெளியில் வந்த பிறகும்

இருவரும் ஒன்றாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றதோடு மக்கள் பலரின் மனதையும் வென்று இருந்தனர். இதனைதொடர்ந்து இவர்களது ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை

ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு இருக்கையில் இது குறித்து கேட்டபோது இவர்கள் அமீர் இன்னும் எங்களுக்கு திருமணம் எல்லாம் ஏதும் நடக்கவில்லை ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….