தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் பல புதுமுக கலைஞர்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்த போதும் அதை வெகுவாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர் . இருப்பினும் அந்த காலத்தில் இருந்து திரையுலகில் இருந்து வரும் பலரும் என்னதான் தற்போது அவர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வராமல் இருப்பினும் அவர்கள் இன்னமும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் . அந்த வகையில் தனது சிறுவயது முதலே பல

முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடி சினிமா துறையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல பின்னணி பாடகி சுஜாதா. இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது இனிமையான குரலால் இதுவரைக்கும் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். அதோடு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு பல மொழிப்படங்களில் பாடியுள்ள இவர் தனது 18 வயதிலேயே

கிருஷ்ணா மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு ஸ்வேதா மோகன் எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் இவரும் தற்போது திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருகிறார் அதோடு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களாக நடுவராக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில் சுஜாதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் எனது திருமணமாகி சில வருடங்களிலேயே இரண்டு முறை கருகலைப்பு

ஆனது அதன் பின்னர் எனக்கு குழந்தையே பிறக்காது என எண்ணிய நிலையில் ஸ்வேதா மோகன் பிறந்தார் மேலும் அந்த சமயத்தில் நான் படங்களில் பிசியாக இருந்த நிலையில் அவரை என்னால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை அதோடு அவரது எந்த பள்ளி மற்றும் கல்லூரி விழாவிற்கும் நாங்கள் போனது இல்லை. இதற்கு எல்லாம் பரிகாரமாக தான் தற்போது அவரது மகளை நான் முழுநேரமும் கவனித்து வருகிறேன் என உருக்கமாக கூறியிருந்தார் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ………