தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் சினிமா வட்டராத்தில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் முதலில் டப்பிங் கலைஞராக திரையுலகில் அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை

நடிகராக நடித்து அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை அடுத்து ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு தனது நடிப்பு திறமையின் மூலமாக தென்னிந்திய அளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பதோடு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்  வருபவர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம். மேலும் படங்களில்மாஸ் ஹீரோவாக மட்டும்

நடிக்காமல் கதைக்கு ஏற்ப தனது உடலை வருத்தி நடிப்பதில் விக்ரமை மிஞ்ச ஆள் இல்லை எனலாம் அந்த அளவிற்கு காசி படத்தில் கண் தெரியாதவராக நடிக்க தொடங்கியதை அடுத்து அந்நியன், ஐ, பிதாமகன்,  தெய்வதிருமகள் என பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர்

மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலன் கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது …………..