தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி  நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் . அதில்

தனக்கு மையோசிடிஸ் எனும் மர்ம நோய் தாக்கம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையில் தற்போது இருந்து வருவதாகவும் கூறிய நிலையில் அந்த நோயின் தாக்கம் அதிகரித்து பல வழிகளில் மேற்கொண்டு இறுதியாக மேற்கட்ட சிகிச்சைக்காக தென்கொரியா வரை சென்று வந்த நிலையில் தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வெடுத்து வருவதோடு அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவர் குறித்த தகவல்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . அந்த வகையில் நடிகை சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகரான நாகசைதன்யவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவர்களது விவாகரத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது இதையடுத்து பிரபல விமர்சகரான உமர் சந்து தனது இணைய பக்கத்தில்

சமந்தா பேசுவது போல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், நாகசைதன்யா ஒரு மிகவும் மோசமான கணவர் , என்னை அவர் மனதளவிலும் , உடலளவிலும் நிறைய துன்புறுத்தியுள்ளார். அதோடு நான் கர்ப்பமாக இருந்தேன் இருந்தும் கருகலைப்பு செய்துவிட்டேன் கடவுளுக்கு நன்றி அதன் பின்னர் நான் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..