தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பல வருடங்களாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர்  திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் அடுத்ததாக மூன்று படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இவ்வாறு

பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது மூத்த மகளும் பிரபல முன்னணி நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த வீட்டில் நகை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ள நிகழ்வு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனது வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் மதிப்புள்ள நகை , வைரகற்கள் மற்றும் நவரத்தின  கற்கள் திருட்டு போயிருப்பதாகவும் இதனை தனது வீட்டில் வேலைசெய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார் . இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இப்படி

இருக்கையில் இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது . மேலும் பலரும் இதற்கு பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் அள்ளிதெளித்து வருகின்றனர் . இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினி மகளின் வீட்டில் நடந்துள்ள இந்த நிகழ்வு பலரையும் உறையவைத்துள்ளது ………