தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில்பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் மருத்துவமனையில் இருந்தபடியே தனக்கு மையோசிடிஸ்

எனும் நோய் பாதிப்பு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே யசோதா படத்தில் நடித்திருந்தார் . இந்த படம் மக்கள் மத்தியில் இவருக்குபலத்த வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம்

படத்தில் நடித்திருந்தார் அதோடு இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில்

வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இதையடுத்து இந்த படத்திற்கு சம்பளமாக சுமார் 7  கோடி வரையில் வாங்கியதாக   பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் கால்சீட் 150 நாட்கள் ஒதுக்கிய நிலையில் சுமார் 3  கோடி வரையில் கொடுக்கபட்டதாகவும் கூறபடுகிறது ………..