தமிழ் சின்னத்திரையில் தற்போது வெளிவந்துகொண்டு இருக்கம் தொடர்களுக்கு பஞ்சமே இல்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட பல எபிசோடுகள் ஓடி வெற்றி பெற்ற தொடர்களுக்கு இணையாக தற்போது புது புது தொடர்களும் வெளிவந்துகொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். இபப்டி தமிழ் மொழியில் வந்த தொடர்களை தாண்டி தற்போது வேற்று மொழியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சீரியல் தொடர்களையும் தமிழில் மொழி பெயர்த்து அவைகளும் வெளிவந்து இங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகிறது என்றே சொல்லாலம்.
இப்படி இதே போல தமிழ் மொழியில் மிகப்பெரிய வெற்றியடைந்த தொடர்களையும் வேற்று மொழியினர் அந்த சொந்த மொழியில் ஒளிபரப்பி வருகின்றனர். இப்படி இரண்டு மொழிகளுக்கு மேல் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த மிகப்பெரிய தொடர் என்னவென்று சொன்னால் அது நாகினி சீரியல் என்றே சொல்லாம்.
பாலிவுட் சினிமாவில் ஒரு தொடர் படு பிரபலமாக ஓடியது. பாம்பின் கதையை வைத்து 5 சீசன்களுக்கு மேல் வெவ்வேறு கதைக்களத்தில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.விரைவில் 6வது சீசனும் வர இருக்கிறது, அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறியவர் மௌனி ராய்.
இவர் எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளைகொண்ட ஒரு சீரியல் நடிகை.தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
துபாய் தொழிலதிபரான சுராஜ், மௌனி ராயை முதன்முதலில் 2019ம் ஆண்டு நியூஇயர் அன்று தான் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதோ இருவரின் திருமண கோல புகைப்படம்,