பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கிய தற்போது பதினான்கு வாரங்களை கடந்து இறுதி வாரத்தை எட்டியுள்ளது இதையடுத்து இந்த சீசனில் பலரும் புதுமுகங்களாக என 21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இறுதி வாரத்தில் டைட்டில் மற்றும் ஐம்பது லட்சம் பரிசுதொகையை நோக்கி மீதம் எழு போட்டியாளர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வெகு

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படியிருக்கையில் இந்த வாரம் வெளியில் சென்ற அணைத்து போட்டியாளர்களும் ஒருவர் பின் ஒருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பைனல் செல்லும்  போட்டியாளர்களை உற்சாகபடுத்தி வருவதோடு அவர்களுக்கு தொடர்ந்து பல கேளிக்கை டாஸ்க்குகளை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில டாஸ்க்குகள் அவர்களை உற்சாகப்படுத்துவதை தாண்டி அவர்களை வெறுப்படைய செய்து வரும் நிலையில் இந்த வாரமும்  பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் விருந்தினர்களாக

உள்ளே வந்த ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் அவர்கள் பங்குக்கு கொளுத்தி போட அடுத்ததாக வந்த சர்ச்சை நாயகிகளான தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் அசீம் மற்றும் விக்ரமன் , எடிகேவை வச்சு செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் பைனல் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அவர்களை ஒரு  நாள் பிக்பாஸ் ஆக இருந்து டாஸ்க்குகளை கொடுக்க சொன்ன நிலையில் மைனா கதிரவனுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்ததை அடுத்து கதிரவன்

மயங்கி விழுந்ததை உண்மை என எண்ணி சகபோட்டியாளர்கள் அவரை உடனடியாக மெடிக்கல் ரூமிற்கு பதறிபோய் தூங்கி செல்லும் நிலையில் இறுதியில் தான் அவர் தான் நடத்தியது வெறும் நாடகம் கூறியதை அடுத்து அனைவரும் மிகுந்த கோபத்துக்கு சென்றனர். இதையடுத்து கமல் அவர்கள் இன்றைக்கு அனைவரையும் வெளுத்து வாங்குவது போல் ப்ரோமோ வெளியாகி உள்ளது இதை வைத்து பார்த்தால் நிச்சயம் இன்றைக்கு சம்பவம் உள்ளது என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…..