தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே போதாத காலமாக இருந்து  வருகிறது எனலாம் அந்த வகையில் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் காலமாகி வரும் தகவல்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மக்கள் பலரையும் அதிர்வலையில் சிக்க வைத்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு முன்னனி பிரபலம் காலமாகியுள்ள தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை

ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என ஏறக்குறைய 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி தனது வசீகரமான குரலால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி மூத்த பாடகி வாணி ஜெயராம். இதனைதொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை தனது

சொந்த குரலில் பாடி பலரையும் மதிமயங்க செய்திருப்பதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல படங்கள் மற்றும் இசைகச்சேரி களில் பாடி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இன்று அதிகாலை வாணி ஜெயராம் அவரது வீட்டின்

படுக்கைறையில் காலமான நிலையில் இருந்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் படுக்கையில் தவறி கீழே விழுந்த நிலையில் நெற்றியில் அடிபட்டுள்ளதாக அறிக்கைகள் கூறப்படும் நிலையில் இவர் காலமான தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்……..