சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம் . இந்நிலையில் 80 களில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு

ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். முதல் மகள் கார்த்திகா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இரண்டாவது மகள் துளசி, மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான கடல் என்ற

படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சினிமாவில் இருந்து விலகி இருந்த துளசி, தற்போது அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் தான் வெகு நாட்களுக்கு பிறகு அவரை பார்க்க முடிந்தது.

அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார். இதையடுத்து அதில் அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் யான் படத்தில் நடித்த துளசியா இப்படி குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க என பிரமித்து போனதோடு அந்த புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்………………

 

 

 

 

 

இதோ புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Thulasi Nair (@thulasin)