தற்போது திரையுலகில் இளம் நடிகைகள் பலரும் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு பல இளசுகளின் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள் இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல நடிகைகள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அந்த வகையில் 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரனயோமனிதூவல்  படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்

கோபிகா. இதன்பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த நடிகை கோபிகாவிற்கு தமிழில் அறிமுகம் கொடுத்த திரைப்படம் தான்  சேரன் இயக்கி நடித்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக மனசுக்குள்ளே காதல் வந்துச்சா பாடல் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை கோபிகா

2013ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகினார். Bharya Athra Pora என்ற திரைப்படத்தில் தான் நடிகை கோபிகா கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவர் திருமணம் செய்துகொண்ட நடிகை கோபி தற்போது கணவர், இரு பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தனது குடும்பத்துடன் கோபிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.