தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தளபதி விஜய்யின் தந்தையும், திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.   கடந்த 1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி

திருமணம் செய்து கொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதன்பின் 1974ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மாதத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல் தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர். இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்யவேண்டும் என எஸ்.ஏ.சி இடம் ஷோபா கூறியுள்ளார்.

இதனால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி – ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது யூடுப் சேனலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………..