இன்று நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படம் வெளியாகியுள்ளது. நயன்தாரா

தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. ஹிந்தியில் அண்மையில் அறிமுகமான இவர், தற்போது தமிழில் அன்னப்பூரணி என்ற படத்தில் நடித்துள்ளார். சமையல் கலையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இது நயன்தாராவின் 75 வது திரைப்படம்.  இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார், சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சாரி கேட்ட நயன்

இன்று படம் வெளியான நிலையில், படத்தின் செலிபிரிட்டி ஷோவை பார்க்க நயன்தாரா சென்றுள்ளார். அப்போது நயனின் உதவியாளர்கள் சிலர் புகைப்பட கலைஞர்களை வழிவிடு சொல்லி நகர்த்தியதில் ஒரு புகைப்பட கலைஞர் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதன் காரணமாக போட்டோக்ராபரிடம் மன்னிப்பு மன்னிப்பு கேட்ட நயன்தாராஉதவியாளர்களிடம், “டச் பண்ணாதீங்க என்றும் கூறியுள்ளார்.   முன்னதாக வெளியான அன்னபூரணி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.