நாகசைதன்யா உடன் எழுந்த கிசுகிசுவிற்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்து முதன் முதலாக வாய் திறந்துள்ள சோபிதா துலி பாலா, என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும்,

எழுதுபவர்களுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்.

அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதன்மூலம், இருவருக்கும் உறவு ரீதியாக எந்தவித தொடர்பும் இல்லை என தெரிய வருகிறது.