நடிகர் விஜய் தனது மனைவி மகனை கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடம் பிரிந்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சமீபத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், இப்படம் மாபெறும் வெற்றியும் பெற்றது. அடுத்தடுத்து சினிமாவில் சாதித்து வரும் விஜய்யின் குடும்பத்தில் சில பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

விஜய் இவ்வாறு மாபெரும் நடிகராக வலம்வருவதற்கு பெற்றோர் மட்டுமல்ல மனைவியும் ஒரு காரணமே. நடிகர் விஜய் சங்கீதா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு சஞ்சய், திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்பொழுதும் மனைவி பிள்ளைகளை பொது விசேஷத்திற்கு அழைத்து வரும் விஜய் சமீப காலமாக அழைத்து வருவதே இல்லை.

மகள் திவ்யா ஷாஷாவின் படிப்பின் காரணமாக சங்கீதா லண்டனில் இருப்பதால் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகின்றது.ஆனால் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விஜய் தனது குடும்பத்தை பார்க்க வெளிநாடு சென்றுவிடுவார். ஆனால் தற்போது 2 ஆண்டுகளாக அவர் செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே நடிகைகளுடன் நெருக்கம் இதனால் குடும்பத்தில் பிரச்சினை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் சம்பாதித்த பணத்தை தற்போது அரசியலுக்கு செலவு செய்வது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.அரசியலுக்கு சென்றுவிட்டால் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் போய் விடும்.ஆனால் விஜய் அரசியலில் இறங்கும் முடிவில் தீவிரமாகவே இருந்து வருவதால், மனைவி மகனிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.