சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கலக்கப்பேவது யாரு, ஜோடி நம்பர் 1 என அடுத்தடுத்து பணியாற்றி வந்தார். அப்படியே வெள்ளத்திரை வந்து கலக்கி வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் தன்னுடன் பணியாற்றிய யாரையும் மறக்காமல் அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறார்.

தனது படங்களில் எப்போதுமே விஜய் டிவி பிரபலங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விடுகிறார். எல்லோருக்கும் ஆதரவாக இருந்த சிவகார்த்திகேயன் ஒரு விஜய் டிவி பிரபலத்தை கஷ்டப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார் பிளாக் பாண்டி. அப்போது சிவகார்த்திகேயனுடன் பழகிய உரிமையில், சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றுள்ளார்.

ஆனால் பிளாக் பாண்டியை கண்டுகொள்ளாமல் போனதாகவும், பின்னர் அவரது மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும் பாண்டி கூறியுள்ளார். இது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது, நான் அவரிடம் ஏதாவது நடிக்க வாய்ப்பு இருந்தால் கேட்கலாம் என நினைத்தேன்.

எனக்கு கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு, அப்படி இருக்கும் போது எனக்கு பணம் எதுக்கு என்பதால் சிவகார்த்திகேயன் மேனேஜர் கொடுத்த தொகையை வாங்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனின் மேனேஜர் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை என சோகமாக பிளாக் பாண்டி கூறியுள்ளார்.