தமிழ் சினிமாவின் டாப் காதல் தம்பதிகள் என்றால் அது அஜித் ஷாலினி தான்.அஜித் ஷாலினி அமர்க்களம் படத்தில் பரஸ்பரம் அறிமுகமான அஜித் ஷாலினி, பின்னர் காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து ஒதுங்கிய ஷாலினி, அவ்வப்போது மீடியா கண்களில் பட்டு வருகின்றார்.

ஆனால், அதே நேரம் அஜித் தற்போது இந்தியாவின் மிக முக்கிய நடிகர். அஜர்பைஜானில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இவர்களின் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

1 கோடி கொடுத்து.. இது குறித்து பேசிய அவர், அப்போது, ‘ஷாலினி தந்தை பாபு, தனது மகள் ஷாலினி மற்றும் அஜித் காதலித்து வருவதை அறிந்து, அஜித்திடம் ரூ. 1 கோடி கேட்டுள்ளார். ரூ. 1 கோடி கொடுத்தால் தான் ஷாலினியுடன் திருமணம்’ என கூறியுள்ளார்.

இதற்கு அஜித் சரி என கூறிவிட்டு ரூ. 1 கோடி கொடுத்துவிட்ட பின் தான் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் என அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.