தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவதோடு மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருவதோடு வசூல் அளவிலும்

சாதனை படைத்து வருகிறது. மேலும் முழுக்க குடும்ப பின்னணியை மையமாக கொண்ட இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சமில்லை எனலாம். இந்நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா. பிரகாஷ்ராஜ், யோகிபாபு, பிரபு என பல முன்னணி திரை பிரபலங்களும் இதில்  நடித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகை ஜெயசுதா. இவர் இந்த படத்திற்கு முன்னரே பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக

நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தற்போது மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னரே திருமணமான நிலையில் அது பாதியிலேயே விவாகரத்தில் போய் முடிந்ததை அடுத்ததாக நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து

சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்  கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக காலமானார். இதனைதொடர்ந்து சில காலமாக தனிமையில் வாழ்ந்து வரும் ஜெயசுதா தனக்கு 64 வயதாகும் நிலையில் தற்போது பிரபல தொழிலதிபர் ஒருவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மாதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……