பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவி பல இல்லத்தரசிகளின் விருப்ப சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது காரணம் அந்த அளவிற்கு அந்த சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடர் கணவர் மற்றும் இரு மனைவிகள்

என முக்கோண காதல் கதையை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ராதிகா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருபவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேடி. இவர் இதற்கு முன்னரே வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் மேலும் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில்

வேற லெவலில் பிரபலமாகி இருந்தார். இதனைதொடர்ந்து பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தற்போது பல முன்னனி நடிகர்களின் படங்கள் மற்றும் தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி பல இளசுகளின் மனதையும் கொள்ளை

கொண்டு வரும் நிலையில் தற்போது சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது மகன் ராகுலுடன் ஒன்றாக இருக்கும்படியான புகைபடத்தை பதிவிட்டது மட்டுமின்றி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மகனை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா வாயடைத்து போயுள்ளனர்…..