தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு இந்திய சினிமாவை தாண்டி உலகளவில் ஹாலிவுட் சினிமாவில் ஹீரோவாக நடித்து திரையுலக பிரபலங்கள் உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். தனது பள்ளிபருவத்திலேயே திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான

இவர் முதலில் தனது அண்ணனும் பிரபல முன்னணி இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டார். தனது முதல் படத்திலேயே பல நெகடிவ் விமர்சனங்களை வாங்கியதோடு இவரெல்லாம் ஹீரோவா என கேள்வி எழுப்பிய பலருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக

நடித்து இன்றைக்கு தென்னிந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் , பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருவதோடு தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார், இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல

படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வாத்தி படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் அந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கையில் சமீபத்தில் தனுஷின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. காரணம் அந்த புகைபடத்தில் அவரது அம்மாவை பார்த்த பலரும் என்னது இவங்கதான் இவரோட அம்மாவா என வியந்து போயுள்ளனர்…….