கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் பெரிதும் பொழுதுபோக்காக இருந்து வந்ததோடு வெகு பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இதில் யார் அந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டில்லையும் சுமார் ஐம்பது லட்சம் பரிசுதொகையையும் வெல்ல போகிறார்கள் என தெரியாத நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இப்படி இருக்கையில் பைனல் வாரத்தில் அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், அமுதவாணன், கதிரவன் ஆகியோர் போட்டி போட்டு வந்த

நிலையில் வழக்கம் போல் பிக்பாஸ் இறுதி வாரத்தில் வைக்கும் பணப்பெட்டி டாஸ்க் இந்த சீசனிலும் அரங்கேறிய நிலையில் மூன்று லட்சத்துடன் பணப்பெட்டிக்கு பதிலாக பணமூட்டை கட்டி தொங்கவிடப்பட்டது இதனைதொடர்ந்து இதை யார் எடுக்கபோகிறார்கள் என பலரும் பார்த்து வந்த நிலையில் கதிரவன் மூன்று லட்சம் பணமூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இப்படி இருக்கையில் மீதம் ஐந்து போட்டியாளர்கள் இருந்த நிலையில் இந்த சீசனில் புதிய மாற்றமாக பிக்பாஸ் மீண்டும் பணபெட்டியை வைத்து இருந்தார்கள் மேலும்

மூன்று லட்சத்துடன் வைக்கப்பட்ட நிலையில் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கும் என் கூறிய நிலையில் அதன் மதிப்பு 13 லட்சத்தை எட்டிய நிலையில் இம்முறை அமுதவாணன் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் . இதையடுத்து பணபெட்டியுடன் அவர் மொத்தம் பிக்பாஸ் வீட்டில் இருந்த 103 நாட்களுக்கு சேர்த்து அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க ஒரு நாளைக்கு சுமார் 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பேசப்பட்ட நிலையில் இவர் மொத்தம் 103  நாட்களுக்கு சேர்த்து சுமார் 37லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……