தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் மறுக்கபட்டு பலரும் சினிமாவை விட்டு விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது பப்ளியான வசீகர தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு

முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் அரசியல்

மீது ஆர்வம் கொண்டு சினிமாவை விடுத்து தனது முழு கவனத்தையும் அதில் செலுத்த ஆரம்பித்தார். இவ்வாறு இருக்கையில் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அம்மிணி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனது காலில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில்

இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு அதில், உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது ஒருவர் என்ன செய்வார்…? மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும் மேலும் சாதிக்கும் வரை நிறுத்தமாட்டேன் என கூறியிருந்தார். இதனைதொடர்ந்து இந்தா தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)