தற்போது திரையுலகில் பல துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இசை திறமையால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்கள். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நான் படத்தின் மூலமாக தன்னை

ஹீரோவாக மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் அசத்தி வருகிறார். இப்படியிருக்கையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வந்த நிலையில் அதன் படபிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது இதையடுத்து கடலில் பைக்போட்டில் சேஸிங் காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாரதவிதமாக எதிரே இருந்த மற்றொரு போட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்ந விபத்தில் சிக்கி விஜய்

ஆண்டனியின் தாடை,பற்கள் எல்லாம் உடைந்து பலத்த காயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது முகத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யபட்டு இருந்தது. இதனைதொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனியின் உடல்நலம் தேறி வரும் நிலையில் அவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், அன்பு இதயங்களே நான்

இப்போது 90 சதவிகிதம் குணாம் அடைந்துவிட்டேன் மேலும் எனது தாடை, மூக்கு எலும்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டன. அதுமட்டுமில்லாமல் என்னவோ தெரியவில்லை இப்போது முன்பை விட சந்தோசமாக உங்களால் உணர்கிறேன். வற்றும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 படத்தின் பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் உங்கள் அன்புக்கு நன்றி என கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……..