தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தது மட்டுமின்றி தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக இன்றளவு வரை இருந்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து

கொண்டார் மேலும் இவர்களுக்கு அன்ஷு மாலிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார் இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் அரசியல் மீது ஆர்வம் கொண்டு ஓய் எஸ்ஆர் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இரண்டுமுறை எம் எல் ஏவாக இருந்த நிலையில் தற்போது ஆந்திர அரசின் சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகள்

ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது தனது மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பது போல கூறி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது தானாக சென்று பெரும் சர்ச்சை ஒன்றில் வசமாக சிக்கியுள்ளார் பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான ரோஜா. அந்த வகையில் சுற்றுலா துறை அமைச்சரான ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திராவில்

உள்ள கடற்கரைகளை ஆய்வு செய்து வந்த நிலையில் அப்போது அவர் கடல்நீரில் காலாற இறங்கி நடந்துள்ளார் அந்த சமயத்தில் அவரது செருப்பை அவருடன் வந்த ஊழியர் ஒருவர் தூக்கி வந்துள்ளார். இதையடுத்து இந்த புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இணையவாசிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவர்மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Roja Selvamani (@rojaselvamani)