சின்னதிரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இந்த சீசனில் கோமாளிகளாக பல

புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ள நிலையில் அதேபோல் போட்டியாளர்களாக பல திரையுலக முன்னணி பிரபலங்களும் களமிறங்கி உள்ளனர். இதையடுத்து இந்த சீசன் தொடங்கி மூன்று வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த வாரம் எளிமிநேசன் சுற்று நடக்கவுள்ளது இந்நிலையில் இந்த வாரம் யார் முதலில் வெளியேற போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் இருக்கும் நிலையில்

சமீபத்தில் அது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வார எவிக்சன் சுற்றில் மதுரை காளையன், ஷெரின், கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் குறைவான மதிப்பெண்களை பெற்று இறுதி கட்ட சமையலில் இடம்பிடித்து உள்ள நிலையில் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் குக் வித் கோமாளியில் முதல் வாரத்தில்

வெளியேற கூடும் என தெரிய வருகிறது மேலும் இதில் ஷெரின் மற்றும் காளையன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவ்வளவாக பரிட்சியமில்லாத கிஷோர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக  தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..