தற்போது உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் மக்கள் மத்தியிலும் பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது இந்நிலையில் பலரும் தற்போது சுதந்திரமாக காதலித்து வருவதோடு தங்களது விருப்பப்படி திருமணமும் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களாக இணையத்தில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு என்றால் அது கேரளத்தை சேர்ந்த திருநங்கை தமப்திகளின் திருமணம் மற்றும் அவர்களது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் தான். அந்த வகையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட ஜியா

மற்றும் ஜகாத் திருநங்கை தம்பதிகள் இருவரும்  காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு இணைந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களது இணைய பக்கத்தில் தாங்கள் அப்பா அம்மா ஆகபோகிறோம் என்பதை வெளிபடுத்தும் வகையில் வித்தியாசமாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த புகைபடங்கள்

மற்றும் தகவல்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலானது. இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்ர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது அதுவும் எந்தவொரு அறிவியல் முறையும் இல்லாமல் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை தங்களது குழந்தையின் பாலினம் குறித்து அந்த தம்பதி வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் பலரும் இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது

அதன்படி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜகாத் கர்ப்பமாக இருந்த நிலையில் எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறிய நிலையில் சில மருத்துவ காரணங்களால் கடந்த புதன்கிழமை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்துள்ளனர். மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரும் தற்போது நலமுடன் உள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தாலும் பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழைகளை கூறி வருகின்றனர்…..