அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகர்களான  எம் ஜி ஆர்,  சிவாஜிக்குப் பிறகு திரையுலகத்தில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் இவரின் நடிப்பு திறமையும், அவரது நடையும் கண்டு மக்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று சிறப்பு பெயரை சூட்டினார்கள் இந்நிலையில் இவர் சில வருடங்களாக எந்திரன், சிவாஜி, லிங்கா, 2.0, காலா, தர்பார், கபாலி, அண்ணாத்தே போன்ற திரைப்படங்களில் நடித்து

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இவருக்கு இவ்வளவு வயதாகியும் அவரது தன்னம்பிக்கை மற்றும் அவரது திறமையை கண்டு பல இளம் முன்னணி நடிகர்களும் வியந்து போயுள்ளனர். இதனை தொடர்ந்து அண்ணாத்தே திரைப்படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கின்ற ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படபிடிப்பு முடிவடைந்து இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில் இப்படம் இன்னும் சில

நாட்களில்  வெளியாக உள்ளது.  இவ்வகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கின்ற படம் தான் லால் சலாம் இத்திரைப்படம் அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில்,படக்குளுவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது. இதன்

காரணமாக இப்படத்தில் இணைந்துள்ள பல்லவி என்பவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனைதொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் 7 நாட்களாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதற்க்கு ரஜினிகாந்த் 25 கோடி வாங்கியுள்ளதாக கருதப்படுகிறது இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….