தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் அதிலும் இதில் பெரும்பாலனோர் சின்னத்திரையின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து திரையுலகில் நுழைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றதோடு பலரது மனதையும் வென்றவர் பிரபல ,முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அந்த

சேனலிலேயே பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததை அடுத்து பலத்த பிரபலத்தை பெற்ற இவர் கடந்த 2010-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரீனா படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வாய்த்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில்

ஒருவராக வலம் வருகிறார். அதோடு இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஆராதனா எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகன் ஒருவரும் பிறந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் இளமைக்கால காதல் குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் சிவா அவர்கள் கல்லூரி படிக்கும் போது

ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததை அடுத்து அந்த பெண் இவரை விடுத்து இன்னொருவரை காதலித்து உள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த பெண்ணை ஒருமுறை சிட்டிசென்டரில் பார்க்கும்போது அந்த காதலித்த பையனுடன் இல்லாமல் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு அவருடன் இருந்துள்ளார் . இதைபார்த்த சிவா அப்பாட அவனுக்கும் கிடைக்கல என சந்தோசபட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..