பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் பலரும் தங்களது இயல்பான நடிப்பு மற்றும் சுட்டித்தனமான பேச்சால் வெகுவாக  மக்கள் பலரையும் கவர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது நடிப்பின் மூலம் திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை கல்யாணி. கோவையை பூர்விகமாக கொண்ட இவரது உண்மையான

பெயர் பூர்ணிதா இருந்தும் சினிமாவுக்காக தனது பெயரை கல்யாணி என மாற்றிக்கொண்டார். இதையடுத்து தனது சிறுவயது முதலே படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ஜூலி கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இந்த படங்களை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் வளர்ந்த

பிறகும் தொடர்ந்து படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு நவ்யா எனும் பெண் குழந்தை பிறந்தது. அதன்

பின்னர் நடிப்பதை விடுத்து தனது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. காரணம் அந்த புகைபடத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என பலரும் வாயடைத்து போயுள்ளனர்…….