மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் விரும்பி பார்க்கபட்டு வரும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி காரணம் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சேனலில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருவதோடு பத்துக்கும் மேற்பட்ட சீசன்களை கடந்து வெளியாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ரசிகர்கள்

ஏராளம் எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு இந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பாடும் பாடல்களும் இசையும் ஒரு பக்கம் என்றால் அதை தாண்டி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் செய்யும் சேட்டைகளும் நகைச்சுவையும் முக்கியம் எனலாம். இப்படி

இருக்கையில் கடந்த பல சீசன்களாக மாகாபாசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்கபோவதில்லை எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து கேட்கையில் மாகாபா ஆனந்த் இனிமேல் இந்த சீசனை தொகுத்து வழங்கவில்லை எனும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது

 

எனவும் அவர் வரும் வாரத்தில் ஒரு சீசனில் மட்டுமே கலந்து கொள்ள போவதில்லை எனவும் அவருக்கு பதிலாக அந்த ஒரு எபிசோடை பிரபல நடிகரான ரியோ ராஜ் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது………