கடந்த சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் பலவிதமான இன்னல்கள் காரணமாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் . இந்த நிலை தொடரும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்த விவேக், எஸ்பிபி, மயில்சாமி என பலரும் காலமாகி வருவதோடு மக்கள் மற்றும் திரையுலகினரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகரான

பிரபு அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் பிரபு அவர்கள் சமீபத்தில் வாரிசு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில்

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது இருப்பினும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத தொடர்ந்து தனது வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென வயிற்று வலி அதிகமானதை அடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் . இதனைதொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சிறுநீரகத்தில் கல்

அடைப்பு தெரியவந்துள்ள நிலையில் அவருக்கு உடனடியாக யுரித்ரோஷ்கொப்பி அறுவை சிகிச்சை செய்து அந்த கற்களை அகற்றியுள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரபுவின் உடல்நலம் தேறி வருவதாக மேலும் இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்பி விடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்…….