தமிழ் திரையுலகில் இன்றைக்கு படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள்  வந்த வண்ணம் இருப்பதோடு தாங்கள் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக வெகுவாக ,மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்திலேயே நகைச்சுவையால் பலரது மனதில்

நீங்காத இடத்தை இன்றைக்கும் பல ரசிகர்களின் விருப்ப நாயகனாக பல முன்னணி காமெடி நடிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் 80,90களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் செந்தில். இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நகைச்சுவையால் சினிமாவில் மற்றும் மக்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . அதிலும் இவரும்  கவுண்டமணி அவர்களும்

சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு  அளவே இருக்காது இப்படி இருக்கையில் இருவரும் இணைந்து இதுவரை நூறுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையியல் செந்தில் அவர்கள் கடந்த 1984-ம் ஆண்டு   கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமசந்திர பிரபு

என இருமகன்கள் உள்ளார்கள் . இதில் மூத்த மகனான பல் மருத்துவராக இருக்கும் நிலையிலும் திரையுலகில் உள்ள ஆர்வத்தால் பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் அவரது இளைய மகனும் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில் செந்தில் அவர்கள் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்ற நிலையில் அங்கு எடுக்கபட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்……….