தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்நிலையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரும் பிரபல

இயக்குனருமான விக்னேஷ் சிவனை மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து திருமணம் முடிந்த நாளில் இருந்தே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத்தாய் முறையை பயன்படுத்தி அதன் மூலமாக இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்து இருந்தார் . இதையடுத்து இந்த தகவல்கள் மக்கள் மற்றும் சட்ட ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில் எப்படியோ

ஒருவழியாக அந்த பிரச்சனைகளை எல்லாம் சரிகட்டி தற்போது மீண்டும் தனது பட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு வந்தார்.

இருப்பினும் அவர்களது முகத்தை யாருக்கும் காட்டாத வகையில் இருந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது குழந்தைகளின் முகத்தை முதன் முறையாக காட்டியுள்ள தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போது உண்மையில் அது நயன்தாராவின் குழந்தைகளே இல்லை எனவும் அது வேறு நபரின் குழந்தை எனவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………