இன்றைய நிலையில் சினமாவில் வெளிவரும் படங்களில் நடிப்பவர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதைகாட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ள நிலையில் அதில் நடிக்கும் நடிகர்களும் வேற லெவலில் தங்களை பிரபலபடுத்தி

கொண்டு தற்போது திரையுலகில் கலக்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் சீரியலில்நடிப்பதற்கு முன்னரே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அதிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்

இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது . இந்நிலையில் தற்போது பல முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வரும் ரேஷ்மா சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது பதிவு ஒன்றை

பதிவிட்டுள்ளார் அதில் இதுவரை மீடியா பக்கமே காட்டாமல் வளர்த்து வந்த தனது மகனை காட்டியதோடு அவர் குறித்த பல தகவல்களையும் உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில்  அவரது மகன் ராகுல் நான்கரை மாதத்திலேயே குறைபிரசவத்தில் பிறந்ததை அடுத்து வரை வளர்க்க தான் போராடியதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………..