பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு அவர்களுக்கு இணையாக அந்த படங்களில் நடிக்கும் வில்லன் நடிகர்களுக்கும் கொடுக்கபடுகிறது . அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80,90களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் மிரள வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் பொன்னம்பலம் . கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் இளையதிலகம் பிரபு

நடிப்பில் வெளிவந்த கலியுகம் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை நடிகராக அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் சின்னத்திரையில் பிரபல

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகர் பொன்னம்பலம் குறித்த சர்ச்சையான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து கேட்டபோது,நடிகர் பொன்னம்பலத்தின் அண்ணனே இவரை ஸ்லோ பாய்சன் வைத்து தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார் . இந்நிலையில் பொன்னம்பலத்தின் தந்தைக்கு  நான்கு மனைவிகள்

இருந்த நிலையில் அதில் மூன்றாவது மனைவின் மகனை தனது மேனேஜராக வைத்திருந்தார். இப்படி இருக்கையில் அவர் இதுமாதிரியான மோசமான செயலை செய்ததாகவும் அவரை விட நான்  நன்றாக வாழ்வதை பொறுக்க முடியாத அவர் இந்த மாதிரி செய்து விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……….