கடந்த சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது எனலாம் இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு பலரும் காலமாகி வருகின்றனர் . அதிலும் இந்த நிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் முன்னணி பிரபலம்  ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில்

வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்த நிலையில் இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், நண்பர் என பல மாறுபட்ட குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சரத் பாபு , இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என

பல மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அண்ணாமலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க  வைத்திருப்பவர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் எழுபது வயதை கடந்த நிலையில் படங்களில் ஏதும் நடிக்காமல்

ஹைதராபத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் . இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்ட  நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இதையடுத்து அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது இருப்பினும் அவர் உடல்நலம் எந்த ஒரு தகவலும் இன்னும் வெளியாகத நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………..