கடந்த சில மாதங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி  தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வேற லெவலில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் வெளியான ஐட்டம் பாடலான ஊ சொல்றியா பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார் அதோடு இந்த பாடல் ஒன்றுக்கு மட்டும் கோடிக்கு மிகாமல் சம்பளம் வாங்கியிருந்தார். இந்நிலையில்

இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது தயாராகி வரும் நிலையில் அதன் படபிடிப்பு வேலைகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வேற லெவலில்  டிறேண்டாகி இருந்தது. இதனைதொடர்ந்து இந்த படம் குறித்த மேலும் ஒரு சுவாரசியமான தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் இரண்டாவது பாகத்தின் சண்டை காட்சியின் ஒரு நாள் சூட்டிங் மட்டும் சுமார் 80 லட்சத்துக்கு மேலாக செலவாகி வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலும் அதிகமாகி உள்ளது எனலாம்…………….