தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இதையடுத்து இவரது நடிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படம் வெளிவந்து கலைவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்

நடித்து வருகிறார். இந்த படம் மக்களிடையே அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பாதிகட்ட படபிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்

இந்த படத்தின் போஸ்டர் கூட இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை உறைய வைக்கும் விதமாக  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தளபதி 68 படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க போவதில்லை எனவும் 2, 3

ஆண்டுகள் அரசியலில் ஈடுபட போவதாகவும் அதன் பின்னரே சினிமாவில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறியிருப்பதாக  பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………