தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை கடந்த திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பிரபல ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல நடிகர் அசோக் செல்வன். இந்நிலையில் சமீபத்தில்

சரத்குமார் மற்றும் இவரது நடிப்பில் போர்த்தொழில் திரைப்படம் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடி வருகிறது . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் அடுத்ததாக கைவசம் பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரோடக்ஸான்ஸ்

தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் நடித்து வரும் நிலையில் இதில் ஹீரோயினாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் வரும் செப்டம்பர் 13-ம் தேதி பிரமாண்டமான

முறையில் இவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர் . இவ்வாறு இருக்கையில் இவர்களது இந்த காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமே இயக்குனர் பா. ரஞ்சித் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….