பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சி உலகளவில் மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்றுள்ள நிலையில் வெற்றிகரமாக ஆறு சீசன்களை கடந்து தமிழில் ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சீசனில் அதிகளவில் மக்கள் மத்தியில் பரிட்சியமில்லாத

பலரும் கலந்து கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி முடிந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கவுள்ளது. இதையடுத்து இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் இந்த சீசனில்

முதல் போட்டியாளராக பிரபல முன்னணி செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் வார இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தனியார் சேனலான பாலிமர் நியூஸ் சேனலில் பார்ப்பதற்கே அப்பாவி போல் இருக்கும் இவர் தான் மிகவும் வர்ணனையாக செய்தி வாசித்து பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இவருக்கு மக்கள்

மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை. இவரை தொடர்ந்து இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………