பொதுவாகவே ஒரு திரைப்படம் வெற்றி பெற ஹீரோ மற்றும் வில்லன் காம்போ திரைக்கதைக்கு ஏற்ப வலுவாக இருந்தாலே படம் வெற்றி அடைந்து விடும். முந்தைய காலங்களில் வெளிவந்த படங்களில் வில்லன் கதாபாத்திரதை பெரும்பாலும் விரும்பியதில்லை ஏனெனில் அக்கதாபாத்திரம் அனைவரும் வெருக்க கூடிய வகையில் தான் வடிவமைக்க பட்டிருக்கும். ஆனால் தற்போதய மார்டன் சினிமாவில் ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு தான் அதிக வரவேற்பும் ரசிகர் அதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகின்றன. இதற்கு சான்று விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் ரோல் , மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் ரோல், தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் ரோல், சமீபத்தில் வெளிவந்த

விக்ரம் படத்தில் சூர்யாவின் ரொலெக்ஸ் கேரக்டர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் இயக்குனர் சந்திர மௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா பாட்டியா, ராணா , சத்தியராஜ் ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் பிரபாஸ் சுக்கு வில்லனாக ராணா தனது அசாதிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். இதைத் தொடர்ந்து ராணா நடித்த மற்ற படங்கள் யாவும் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இவர் சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியாக உள்ள ” கிங் ஆஃப்

கோத்தா படத்தின் விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசினார். அவர் பேசும்பொழுது துல்கர் சல்மான் அவர்கள் மிகவும் அன்பானவர், அனைவரிடமும் பண்பாக பழகுபவர், சினிமாவில் அதிக பொறுமை குணம் உள்ள மனிதர் இதற்கு சான்று நான் துல்கர் சல்மான் பட ஷூட்டிங் ஒன்றிற்கு சென்றிருந்தேன், அந்த படத்தில் நடிக்க பிரபலமான ஒரு ஹிந்தி நடிகை வந்திருந்தார், ஆனால் அவர் நடிக்க வராமல் தனது கணவரிடம் வெட்டியாக பலமணி நேரம் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். இவர்குகாக மொத்த படகுளுவும் காத்துகொண்டு இருந்தது. வேறு எந்த நடிகராக இருந்தாலும் அந்த நேரத்தில் கோவபட்டு இருப்பார்கள்,

ஆனால் துல்கர் சல்மான் அதை கூட பொறுமையாக தான் கையாண்டார் என துல்கர் சல்மானை புகழ்ந்து கூறினார். இதை தொடர்ந்து தி சோயா பெக்டர் படத்தில் நடித்த சோனம் கபூர் தான் அந்தநடிகை  என ரசிகர்கள் கண்டு பிடிக்க, இணையத்தில் சோனம் கபூர்ஐ மிக பெரிய அளவில் ட்ரோல்  செய்து வருகுகின்றனர். இது தற்பொழுது சர்ச்சையாக மாற ராணா தனது டிவிட்டர் பக்கத்தில் சோனம் கபூரிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்து உள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் பதிவுகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…………