இந்திய அளவில் மிக பிரபலமாகவும் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தான் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த பல படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா மாமா பாடலில் சமந்தாவின்வேற லேவலான  நடனம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதை மையோசிடிஸ் எனும் ஆட்டோ இம்முன் நோயால்

பாதிக்கப்பட்டு அதன் விளைவாக  தொடர்ந்து உடல் நலக் குறைவால் சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். எனவே தற்போது விஜய் தேவர்கொண்டா இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்துள்ளார். குஷி படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சமந்தாவின் காம்பேக் படம் என்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதை

தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இசை வெளயீட்டு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு நடிகை சமந்தா கிளமாரான உடையில் வந்துள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு சமந்தாவும் விஜய் தேவர்கொண்டவும் ரொமான்டிக்காக நடனமாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். நடனமாடும் பொழுது நடிகை சமந்தாவை நடிகர்

விஜய்தேவர்கொண்டா அலெக்காக தூக்கினர். இவற்றின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றன. இச்சம்பவம் குறித்து இணையதள வாசிகள் பலர் விஜய் தேவர்கொண்டவின் செயலை கண்டித்தும் வரவேற்றும் பல பதிவுகளை போட்டுகொண்டு இருக்கின்றனர். மேலும் இதுபோன்று காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அதில் கலந்து கொண்ட அக்ஷய் குமார் சமந்தாவை அலேக்காக தூக்கி சுற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவலில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….