தற்போது தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெயிலர் படம் பற்றியதாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷேரப் , ரம்யா கிருஷ்ணன் உள்பட பல முன்னணி திரைபிரபலங்கள் பலரும் நடித்துள்ள நிலையில் இந்த படம் வெளியான நாளில்

இருந்து உலகளவில் பல சாதனைகளை படைத்து வருவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை மிர்னா மேனன் . மலையாளத்தை பூர்விகமாக கொண்டதை அடுத்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்

இதனைதொடர்ந்து இவர் தமிழில் அதிதி மேனன் எனும் பெயரில் நடித்து வந்த நிலையில் நடிகரான அபி சரவணன் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து இருவரும் ரகசியமான முறையில் திருமணமும் செய்து கொண்டனர். இறுப்பினும் சில காலமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கையில் விவாகரத்தில் போய் முடிந்தது

மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிர்னா மேனன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன தகவல்கள் அண்மையில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………