முந்தைய காலங்களில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தால் போதும் மக்கள் அந்த நடிகரை அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் மாடர்ன் திரையுலகத்தில் என்னதான் வெற்றி படத்தை ஒரு நடிகர் கொடுத்தாலும் சிறிது காலம் தான் அவர் மக்கள் மனதில் நீடிக்கிறார். முன்பு இருந்த நடிகர்கள் படத்தில் நடித்தால் மட்டுமே போதுமானதாக இருந்தது, அவர்கள் எந்த சோஷியல் மீடியாவிலும் தன்

செல்வாக்கை நிரூபிக்கத் தேவையில்லை. ஆனால் இப்பொழுது உள்ள டிஜிட்டல் யுகத்தில் ஒரு நடிகர் நடித்தால் மட்டுமே போதாது,மக்கள் மத்தியில் டிரெண்ட்ங்கில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்நிலை முன்னணி நடிகர்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகர்கள் தான் தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக பேசுபடு பொருளாக இருக்கின்றன, சமீபத்தில்

கூட தளபதி விஜய் அவர்கள் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கினை தொடங்கினார். இது அந்த நேரத்தில் எவ்வளவு வைரலானது என்று அனைவருக்கும் தெரியும், தளபதி விஜய் அவர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சிறிது நேரத்தில் லச்சகணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் சோஷியல் மீடியா ஒரு நடிகரை

மக்களிடம் எந்த அளவிற்கு கொண்டு சேர்க்கிறது என்று. இதை தொடர்ந்து கன்னட நடிகர் நாகசைதானியா தனது சிறுவயதில் தனது தம்பியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அவர் வேற யாரும் இல்லை நடிகர் நிகில் தான். இப்புகைபடம் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதது………