தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம்- சூர்யா, தனுஷ்-சிம்பு, சிவகார்த்திகேயன்- விஜய்சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்கள் மட்டும்தான், இவர்கள் இவ்வளவிற்கு பிரபலமாக முக்கிய காரணம் தங்களுடைய கடின உழைப்பும் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் தான். இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடிகர்களாக பல நடிகர்கள் தமிழ் திரையுலகில் வளர்ந்து கொண்டு வருகின்றனர்,

இம்மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான் அசோக் செல்வன் அவர்கள். இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே அவருடைய தனித்தன்மையான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பெற்று இருக்கிறார், இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் எனவே இவரை தன்னுடைய ரசிகைகள் சாக்கோபாய் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர், அது போக அசோக் செல்வன் அவர்களுக்கு பல பட வாய்ப்புகளும்

வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தான் தற்பொழுது நடிகர் அசோக் செல்வன் அவர்களுக்கு திருமணம் ஆக உள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன, நடிகர் அசோக் செல்வன் தற்பொழுது அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் அவர்களுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து இருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர்,

இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் அடுத்த மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை தற்பொழுது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது, எனது திருமணம் அருண் பாண்டியன் அவர்களின் திருநெல்வேலியில் உள்ள பண்ணை வீட்டில் நடக்க உள்ளது…………..