இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான களவானி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே

பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல இளம் நடிகை ஓவியா . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் சரிய தொடங்கியதை அடுத்து பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இருப்பினும் இவர் எதிர்பார்த்த

அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை எனலாம் இப்படி ஒரு நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை  பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா சர்ச்சையான பதிலை கூறி அனைவரையும் உறைய செய்துள்ளார். அந்த வகையில் ஓவியாவிற்கு ரகசியமான முறையில் திருமணமாகி குழந்தை ஒருவர்

உள்ளதாக பல கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருந்ததை அடுத்து இதற்கு பதில் கொடுத்த ஓவியா , எனக்கு திருமணம் எல்லாம் ஆகல ஆனா எனக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கு அது என் நாய்குட்டி தான். அதைத்தான் என்னுடைய குழந்தை போல் நான் பார்த்து கொள்கின்றேன் என கூறியுள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..